அன்புள்ள சங்கரன் அவர்களுக்கு
பர்ட்டன் ஸ்டெயின்
கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி
குடவாயில் பாலசுப்ரமணியம்
அன்புள்ள ஜெ
பொன்னியின் செல்வன் பற்றிய விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன, கவனித்திருப்பீர்கள். சோழர் காலம் ஒன்றும் பொற்காலம் அல்ல என்று ஆங்கிலத்தில் (கடுமையான தமிழ்வெறுப்புடன்) எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இங்கும் அதை பலர் எழுதுகிறார்கள். சோழர் காலத்தில் பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்ட கிராமங்களின் பட்டியலை போட்டு ஒருவர் ‘இதில் ஒருவராவது வேறு சாதி உள்ளனரா?’ என்று கேட்டிருந்தார். இரு சாராரும் ஒரே குரலில் பேசுவதுதான் ஆச்சரியமாக உள்ளது
சக்தி
பொன்னியின் செல்வன் நாவல்
யவனராணி- சாண்டில்யன்
உடையார் -பாலகுமாரன்
அன்புள்ள சக்தி,
சோழர் காலத்தை ஏன் பொற்காலம் என்று சொல்லலாம் என விரிவாக எழுதிவிட்டேன். அது இன்றைய காலகட்டத்தை விட மேலானது என்னும் பொருளில் அல்ல. இன்றையகாலமே வரலாற்றின் பொற்காலம். பொற்காலங்கள் வருங்காலத்திலேயே இன்னும் உள்ளன. சென்றகாலங்களில் பொற்காலங்களை தேடுவதில் எனக்கு உடன்பாடில்லை. சென்றகாலம் பொற்காலம் என்றால் சிந்தனையாளர்களின் பங்களிப்பு என ஒன்றுமே இல்லை என பொருள்படுகிறது.
No comments:
Post a Comment