Tuesday, December 27, 2022

கட்டுரைகள்

  ஆசிரியர் வி.மரிய அந்தோனி இந்தக் காவியத்தை 1968 முதல் 1983 வரை பதினைந்தாண்டுகள் எழுதினார். மரிய அந்தோனி 1983-ல் மறைந்தபின் இருபதாண்டுகள் கழித்து 2006-ல் இக்காவியம் நூலாக வெளிவந்தது. கதிரவன் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டது.

அருளவதாரம்

ஜி. நாகராஜன் முதலில் காரைக்குடியில் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பிறகு சென்னை கணக்காயர் அலுவலகத்தில் சிறிது காலம் பணியாற்றி, பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் அவருக்கு கம்யூனிஸ்டு கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டது. கம்யூனிஸ்டுத் தலைவர் எஸ்.ராமகிருஷ்ணன் ஜி.நாகராஜனின் சிந்தனையில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தியவர். சரஸ்வதி ஆசிரியர் வ.விஜயபாஸ்கரனுடன் தொடர்ச்சியாக கடிதத்தொடர்பில் இருந்தார். 

ஜி.நாகராஜன்

மயிலை சீனி.வெங்கடசாமி ‘செந்தமிழ்ச்செல்வி’, ’ஆராய்ச்சி’, ஈழகேசரி’, ‘ஆனந்தபோதினி’, ‘சௌபாக்கியம்’, ‘செந்தமிழ்’, ‘திருக்கோயில்', ‘நண்பன்’, ‘கல்வி’, ‘தமிழ் நாடு,', ‘தமிழ்ப் பொழில்’  போன்ற இதழ்களில் கட்டுரைகள் எழுதினார்.

மாகோவை தேவாங்க குலகுரு ஸ்ரீஸ்ரீசதாசிவானந்த தேசிக சுவாமிகளும், கலப்பதி  ஸ்ரீஸ்ரீதொட்டய்ய தேசிகரும்  சமஸ்கிருதத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்த தேவாங்க புராணத்தை மாம்பழக் கவிச்சிங்க நாவலர் தமிழில் கவிதையாக இயற்றினார். போடிநாயக்கனூர் ஜமீன்தாரராகிய திருவங்காரு திருமலைபோடய காமராசய பாண்டிய நாயக்க துரை ஆதரவில் போடிநாயக்கனூர் ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. (பார்க்க தேவாங்க புராணம்)ம்பழக் கவிச்சிங்க ராயர்

முறையாகத் தமிழ் இலக்கியம் கற்றிருந்த சண்முகம் முதன்மையாக இசைப் பாடல்கள் எழுதினார். விநாயகர், முருகன், சிவன், அம்பாள், பெருமாள் போன்ற தெய்வங்களின் மீதும், மேரி மாதா, இயேசு மீதும் பல பாடல்களைப் புனைந்தார். ராகவேந்திரர், ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை, அரவிந்தர்சந்திரசேகரேந்திர சரஸ்வதி, ஷீரடி சாயிபாபா, சத்ய சாயிபாபா, யோகி ராம்சுரத்குமார் உள்ளிட்டோர் மீது பல பக்திப் பாடல்களை எழுதினார். இவர் எழுதிய பாடல்களை சீர்காழி கோவிந்தராஜன்டி.எம். சௌந்தரராஜன், பாம்பே சகோதரிகள் சரோஜா-லலிதா, கே. வீரமணி, எல்.ஆர். ஈஸ்வரி, எஸ்.ஜானகி, எஸ்.பி. பாலசுப்ரமணியன், மலேசியா வாசுதேவன், உள்ளிட்ட பல இசைக் கலைஞர்கள் பாடியுள்ளனர்.

தேவாங்கரின் வாழ்க்கைப் பின்னணியில் தமிழில் சுப்ரபாரதிமணியன்எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நாவல்களை எழுதியுள்ளனர். எம்.கோபாலகிருஷ்ணன் எழுதிய 'அம்மன் நெசவு' குறிப்பிடத்தக்க நூல்.
செங்கல்பட்டு மாவட்டம், மணிமங்கலம் என்னும் ஊரைச் சேர்ந்த சுந்தர முதலியார்- வேதவல்லி இணையருக்கு 1888-ல் பிறந்தார். செங்கல்பட்டு நேட்டிவ் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை கற்றார். சென்னை தொண்டைமண்டல உயர்நிலைப் பாடசாலையில் பத்தாம் வகுப்பு வரை பயின்றார். அங்கே தமிழ் கற்பித்த சிவப்பிரகாச ஐயரிடமிருந்து தமிழார்வத்தை அடைந்தார். பூவை கலியாணசுந்தர முதலியார்மறைமலையடிகள் ஆகியோரிடம் கல்விகற்றார்.
  • சுவாமி விபுலானந்தர் இயற்றிய மதங்க சூளாமணியின் கருத்தைத் தழுவி வட மொழிச் சொற்களைத் தவிர்த்து அதன் மறுபதிப்பாகவும்,ஆய்வாகவும் கருதும்படி 320 செய்யுள்கள் கொண்ட கூத்துநூல்விருத்தம் எழுதினார்.பாடல்களுக்கு உரையெழுதுவதே உலக வழக்கம், ஈழப்பூராடனார் உரைக்குப் பாட்டெழுதினார்.

கட்டுரைகள்

 ஆசிரியர் வி.மரிய அந்தோனி இந்தக் காவியத்தை 1968 முதல் 1983 வரை பதினைந்தாண்டுகள் எழுதினார். மரிய அந்தோனி 1983-ல் மறைந்தபின் இருபதாண்டுகள் கழித்து 2006-ல் இக்காவியம் நூலாக வெளிவந்தது. கதிரவன் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டது.

அருளவதாரம்

ஜி. நாகராஜன் முதலில் காரைக்குடியில் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பிறகு சென்னை கணக்காயர் அலுவலகத்தில் சிறிது காலம் பணியாற்றி, பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் அவருக்கு கம்யூனிஸ்டு கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டது. கம்யூனிஸ்டுத் தலைவர் எஸ்.ராமகிருஷ்ணன் ஜி.நாகராஜனின் சிந்தனையில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தியவர். சரஸ்வதி ஆசிரியர் வ.விஜயபாஸ்கரனுடன் தொடர்ச்சியாக கடிதத்தொடர்பில் இருந்தார். 

ஜி.நாகராஜன்

மயிலை சீனி.வெங்கடசாமி ‘செந்தமிழ்ச்செல்வி’, ’ஆராய்ச்சி’, ஈழகேசரி’, ‘ஆனந்தபோதினி’, ‘சௌபாக்கியம்’, ‘செந்தமிழ்’, ‘திருக்கோயில்', ‘நண்பன்’, ‘கல்வி’, ‘தமிழ் நாடு,', ‘தமிழ்ப் பொழில்’  போன்ற இதழ்களில் கட்டுரைகள் எழுதினார்.

மாகோவை தேவாங்க குலகுரு ஸ்ரீஸ்ரீசதாசிவானந்த தேசிக சுவாமிகளும், கலப்பதி  ஸ்ரீஸ்ரீதொட்டய்ய தேசிகரும்  சமஸ்கிருதத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்த தேவாங்க புராணத்தை மாம்பழக் கவிச்சிங்க நாவலர் தமிழில் கவிதையாக இயற்றினார். போடிநாயக்கனூர் ஜமீன்தாரராகிய திருவங்காரு திருமலைபோடய காமராசய பாண்டிய நாயக்க துரை ஆதரவில் போடிநாயக்கனூர் ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. (பார்க்க தேவாங்க புராணம்)ம்பழக் கவிச்சிங்க ராயர்

முறையாகத் தமிழ் இலக்கியம் கற்றிருந்த சண்முகம் முதன்மையாக இசைப் பாடல்கள் எழுதினார். விநாயகர், முருகன், சிவன், அம்பாள், பெருமாள் போன்ற தெய்வங்களின் மீதும், மேரி மாதா, இயேசு மீதும் பல பாடல்களைப் புனைந்தார். ராகவேந்திரர், ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை, அரவிந்தர்சந்திரசேகரேந்திர சரஸ்வதி, ஷீரடி சாயிபாபா, சத்ய சாயிபாபா, யோகி ராம்சுரத்குமார் உள்ளிட்டோர் மீது பல பக்திப் பாடல்களை எழுதினார். இவர் எழுதிய பாடல்களை சீர்காழி கோவிந்தராஜன்டி.எம். சௌந்தரராஜன், பாம்பே சகோதரிகள் சரோஜா-லலிதா, கே. வீரமணி, எல்.ஆர். ஈஸ்வரி, எஸ்.ஜானகி, எஸ்.பி. பாலசுப்ரமணியன், மலேசியா வாசுதேவன், உள்ளிட்ட பல இசைக் கலைஞர்கள் பாடியுள்ளனர்.

தேவாங்கரின் வாழ்க்கைப் பின்னணியில் தமிழில் சுப்ரபாரதிமணியன்எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நாவல்களை எழுதியுள்ளனர். எம்.கோபாலகிருஷ்ணன் எழுதிய 'அம்மன் நெசவு' குறிப்பிடத்தக்க நூல்.
செங்கல்பட்டு மாவட்டம், மணிமங்கலம் என்னும் ஊரைச் சேர்ந்த சுந்தர முதலியார்- வேதவல்லி இணையருக்கு 1888-ல் பிறந்தார். செங்கல்பட்டு நேட்டிவ் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை கற்றார். சென்னை தொண்டைமண்டல உயர்நிலைப் பாடசாலையில் பத்தாம் வகுப்பு வரை பயின்றார். அங்கே தமிழ் கற்பித்த சிவப்பிரகாச ஐயரிடமிருந்து தமிழார்வத்தை அடைந்தார். பூவை கலியாணசுந்தர முதலியார்மறைமலையடிகள் ஆகியோரிடம் கல்விகற்றார்.
  • சுவாமி விபுலானந்தர் இயற்றிய மதங்க சூளாமணியின் கருத்தைத் தழுவி வட மொழிச் சொற்களைத் தவிர்த்து அதன் மறுபதிப்பாகவும்,ஆய்வாகவும் கருதும்படி 320 செய்யுள்கள் கொண்ட கூத்துநூல்விருத்தம் எழுதினார்.பாடல்களுக்கு உரையெழுதுவதே உலக வழக்கம், ஈழப்பூராடனார் உரைக்குப் பாட்டெழுதினார்.

Tuesday, November 8, 2022

புதியவை

 ராஜம் கிருஷ்ணன் (1925 - அக்டோபர் 21, 2014) தமிழில் நாவல்கள் சிறுகதைகள் எழுதிய எழுத்தாளர். இடதுசரிப்பார்வையும் பெண்ணியப்பார்வையும் கொண்டிருந்தார். வெவ்வேறு களங்களுக்குச் சென்று களஆய்வு செய்து தன் நாவல்களை எழுதுவது அவருடைய வழக்கம். கோவா விடுதலைப்போர், ஊட்டி படுகர்களின் வாழ்க்கை, தூத்துக்குடி உப்பளம் என மாறுபட்ட வாழ்க்கைச்சூழல்களை எழுதியவர்.

ராஜம் கிருஷ்ணன்

விந்தியா(இந்தியா தேவி) (ஏப்ரல் 12, 1927 - அக்டோபர் 7, 1999) நவீன எழுத்தாளர். தன் இருபது வயதிலிருந்து பதின்மூன்று ஆண்டுகள்(1947-60) தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஒரு நாவல், கட்டுரைகள் எழுதினார். அதன்பின் விந்தியா எழுதாமலானார்.

விந்தியா

 மிழில் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் திகம்பர சாமியார் முதல் ஏராளமான துப்பறியும் கதாபாத்திரங்கள் வந்திருந்தாலும் முதன்மையான ஆளுமைகள் கணேஷ் வசந்த் இருவருமே. துல்லியமாக வகுக்கப்பட்ட கதாபாத்திரங்கள் அவை

கணேஷ் வசந்த்

குமுதத்தில் 1953-ல் நடந்த சிறுகதைப் போட்டியில் வென்று அதன் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை அழைப்பின் பேரில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். குமுதம் இதழில் ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை, ஜ.ரா.சுந்தரேசன் ரா.கி.ரங்கராஜன்புனிதன் ஆகியோர் இணைந்து பணியாற்றினர். அவர்கள் குமுதம் இதழை தமிழில் மிக அதிகமாக விற்கும் வார இதழாக ஆக்கினர். ஜ.ரா.சுந்தரேசன் குமுதத்தில் பல பெயர்களில் கதைகள், நகைச்சுவைக் குறிப்புகள், சினிமாச் செய்திகள் என ஏராளமாக எழுதினார். யோகேஷ், வனமாலி, செல்வமணி, மிருணாளினி, இரா. சிதம்பரம், உதங்கர், சிவதணல், ஜ்வாலாமாலினி என பல பெயர்களில் எழுதினார். 3 

இப்போது யோசிக்கையில் சிவசங்கரி முதலியவர்கள் எவ்வளவு பெரிய நேர்நிலை ஆற்றல்கள் என எண்ணத் தோன்றுகிறது.

சிவசங்கரி

 கேட்டு திருப்புகழ் பாடல்கள் மேல் ஆர்வம் கொண்டார். அப்போது திருப்புகழ் தனிப்பாடல்களாக சிதறிக் கிடந்தது. பெரும்பாலான பாடல்கள் மறக்கப்பட்டிருந்தன. சுப்ரமணிய பிள்ளை திருப்புகழ் சுவடிகளைச் சேகரிக்க ஆரம்பித்தார். இது குறித்துத் தனது நாட்குறிப்பில் அவர், "இன்று 'நல்வெள்ளிக்கிழமை’ என்னும் பண்டிகை நாள். அருணகிரிநாதருடைய திருப்புகழ்ப் பாடல்களை ஓலைப் புத்தகங்களினின்றும் பெயர்த்தெழுத இன்று ஆரம்பித்தேன். எவ்வளவு பாடல் சேகரிக்கக் கூடுமோ அவ்வளவு சேகரித்து, நல்ல தமிழ் வித்துவானால் அவைதமைத் திருத்துதல் என் கருத்து. இம்முயற்சி நிறைவேறக் கடவுளே அருள்புரிய வேண்டும்" என்று எழுதியுள்ளார். மற்றொரு குறிப்பில், "திருப்புகழ்ப் பாட்டுக்களைச் சேகரஞ்செய்து வருகின்றேன். முருகப்பெருமானுடைய அநுக்கிரகத்தினாலே ஆயிரம் பாடலாவது திருத்தமாக அகப்பட்டால் அச்சிட்டு விடலாம். ஜனோபகாரமாயும் வெகு புண்ணியமாயுமிருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

திருப்புகழ் சுவடிகளுக்காக தொடர்ந்து பயணம் செய்தார். உ.வே.சாமிநாதையர் போன்றவர்களுக்கு கடிதம் எழுதி சுவடிகள் கோரினார். 1876-ம் ஆண்டு ஆறுமுக நாவலர் எழுதிய 

வ.த.சுப்ரமணிய பிள்ளை

தலித் இலக்கியத்திற்கு முன்னுதாரணமாகச் சொல்லக்கூடிய கதைகளையும் பிச்சமூர்த்தி எழுதியிருக்கிறார். தமிழில் கு. அழகிரிசாமி ,அடுத்த தலைமுறையில் கந்தர்வன் என ந.பிச்சமூர்த்தி மரபு என ஒன்றை சுட்டிக்காட்ட முடியும்

Saturday, October 1, 2022

சி மணி

  இயற்பெயர் கே.எஸ். சுந்தரம். மார்ச் 21, 1942 அன்று கே.எஸ்.சுப்ரமணியம் - சாவித்ரி இணையருக்குப் பிறந்தார். சுப்ரமணியம் குடும்பம் 1950ல் கல்லிடைக்குறிச்சியில் இருந்து டெல்லிக்கு இடம்பெயர்ந்தது. சுப்ரமணியம் முதலில் தபால்தந்தி துறையிலும் பின்னர் பாதுகாப்புத் துறையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றார். அவருக்கு லட்சுமி, சுந்தரம். கே.எஸ்.வைத்தியநாதன், அகிலா என நான்கு குழந்தைகள். சுந்தரம் (கல்லிடைக்குறிச்சி சுப்ரமணியம் சுந்தரம் எனும் கே.எஸ்.சுந்தரம்) ஆதவன் என்னும் பெயரில் எழுதினார்.

ஆதவன் டெல்லியில் எம்.இ.ஏ.சீனியர் செக்கண்டரி பள்ளியில் எட்டாம் வகுப்புவகை படித்தார். லோதி சாலையிலுள்ள அரசுப்பள்ளியில் உயர்நிலைப்படிப்பை முடித்தார். அங்கே அவருக்கு இந்திரா பார்த்தசாரதி தமிழாசிரியராக இருந்தார் எனப்படுகிறது.

ஆதவன்

தமிழ்ப் புதுக்கவிதை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர் சி.மணி.யாப்பிலிருந்து கவிதை உரைநடை நோக்கி நகர்ந்த காலப் பகுதியில் அதிகம் எழுதியவர். புதுவடிவத்தை நிலைநிறுத்தும் வகையில்  கோட்பாட்டுப் பின்னணியை உருவாக்க விரும்பிய ந. பிச்சமூர்த்தி , க.நா.சுப்ரமணியம்சி.சு. செல்லப்பா ஆகியோருடன் கவிதையியல் பற்றி விவாதித்தவர்.'யாப்பும் கவிதையும்' என்ற மணியின் நூல்தான் புதுக்கவிதை பற்றிய முதலாவது ஆய்வு நூல். யாப்பிலிருந்து விடுப்பட்டதுதான் புதுக்கவிதை என்று நிறுவினாலும் அதில் மரபின் தொடர்ச்சியைக் காணமுடியும் என்று ருசுப்படுத்தியவரும் அவர்தான். அதை வெறும் கருத்தாக்கமாக மட்டுமல்லாமல் படைப்பின் ஆதாரத்துடனும் முன்வைத்தார். அவரைத் தவிர்த்த முன்னோடிகள் பலரும் உரைநடை சார்ந்த மொழியைக் கவிதைக்குப் பயன்படுத்தியபோது செய்யுளின் நடையை மறுவார்ப்புச் செய்தவர் சி.மணி என்று சுகுமாரன் குறிப்பிடுகிறார்.

சி மணி

---------------------

என அவர்களின் பட்டியல் மிக நீளமானது. அவர்களில் ஒருவர் குன்றக்குடி அடிகளார். செயலூக்கம் மிக்க கணங்களால் ஆன முழு வாழ்க்கை அவருடையது

குன்றக்குடி அடிகளார்

சி மணி

 இயற்பெயர் கே.எஸ். சுந்தரம். மார்ச் 21, 1942 அன்று கே.எஸ்.சுப்ரமணியம் - சாவித்ரி இணையருக்குப் பிறந்தார். சுப்ரமணியம் குடும்பம் 1950ல் கல்லிடைக்குறிச்சியில் இருந்து டெல்லிக்கு இடம்பெயர்ந்தது. சுப்ரமணியம் முதலில் தபால்தந்தி துறையிலும் பின்னர் பாதுகாப்புத் துறையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றார். அவருக்கு லட்சுமி, சுந்தரம். கே.எஸ்.வைத்தியநாதன், அகிலா என நான்கு குழந்தைகள். சுந்தரம் (கல்லிடைக்குறிச்சி சுப்ரமணியம் சுந்தரம் எனும் கே.எஸ்.சுந்தரம்) ஆதவன் என்னும் பெயரில் எழுதினார்.

ஆதவன் டெல்லியில் எம்.இ.ஏ.சீனியர் செக்கண்டரி பள்ளியில் எட்டாம் வகுப்புவகை படித்தார். லோதி சாலையிலுள்ள அரசுப்பள்ளியில் உயர்நிலைப்படிப்பை முடித்தார். அங்கே அவருக்கு இந்திரா பார்த்தசாரதி தமிழாசிரியராக இருந்தார் எனப்படுகிறது.

ஆதவன்

தமிழ்ப் புதுக்கவிதை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர் சி.மணி.யாப்பிலிருந்து கவிதை உரைநடை நோக்கி நகர்ந்த காலப் பகுதியில் அதிகம் எழுதியவர். புதுவடிவத்தை நிலைநிறுத்தும் வகையில்  கோட்பாட்டுப் பின்னணியை உருவாக்க விரும்பிய ந. பிச்சமூர்த்தி , க.நா.சுப்ரமணியம்சி.சு. செல்லப்பா ஆகியோருடன் கவிதையியல் பற்றி விவாதித்தவர்.'யாப்பும் கவிதையும்' என்ற மணியின் நூல்தான் புதுக்கவிதை பற்றிய முதலாவது ஆய்வு நூல். யாப்பிலிருந்து விடுப்பட்டதுதான் புதுக்கவிதை என்று நிறுவினாலும் அதில் மரபின் தொடர்ச்சியைக் காணமுடியும் என்று ருசுப்படுத்தியவரும் அவர்தான். அதை வெறும் கருத்தாக்கமாக மட்டுமல்லாமல் படைப்பின் ஆதாரத்துடனும் முன்வைத்தார். அவரைத் தவிர்த்த முன்னோடிகள் பலரும் உரைநடை சார்ந்த மொழியைக் கவிதைக்குப் பயன்படுத்தியபோது செய்யுளின் நடையை மறுவார்ப்புச் செய்தவர் சி.மணி என்று சுகுமாரன் குறிப்பிடுகிறார்.

சி மணி

---------------------

என அவர்களின் பட்டியல் மிக நீளமானது. அவர்களில் ஒருவர் குன்றக்குடி அடிகளார். செயலூக்கம் மிக்க கணங்களால் ஆன முழு வாழ்க்கை அவருடையது

குன்றக்குடி அடிகளார்

Thursday, September 29, 2022

கட்டுரை

  தியாகராஜர், பாரதியார், கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை போன்றோரின் பாடல்கள் சிலவற்றை ஸ்வரப்படுத்தியிருக்கிறார். அண்ணாமலை ரெட்டியார்ரின் 'காவடிச்சிந்தையும்’ பதிப்பித்தார்.

ku azakirisami

வில்லியம் தாமஸ் சத்தியநாதனின் (டபிள்யூ.டி.சத்தியநாதன்) குடும்பத்துடன் தங்கினார். 1878-ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். கிருபா சத்தியநாதன் மருத்துவப்பணியில் காசநோய் தொற்றுக்கு ஆளானார். 1879-ல் புனேவில் உள்ள தனது சகோதரியிடம் மருத்துவச் சிகிச்சைக்காகச் சென்றார்.

கிருபா சத்தியநாதனின் மகன் சாமுவேல் சத்தியநாதன்னை காதலித்து1881-ல் மணந்துகொண்டார். சாமுவேல் கேம்ப்ரிட்ஜ் மாணவர். சாமுவேல் ஊட்டியில் 'Breeks Memorial School' பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றச் சென்றார். கிருபா மருத்துவக் கல்வியை முடிக்காமல் ஊட்டிக்குச் சென்று அங்கே கல்விப்பணிகளில் ஈடுபட்டார். ஊட்டியில் அவருடைய காசநோய் கட்டுக்குள் இருந்தது. அங்குதான் அவர் தன் ஆரம்பகட்ட கட்டுரைகளையும் கதைகளையும் எழுதினார்.

கிருபா

மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்த பொ. பாண்டித்துரைத் தேவர் அக்டோபர் 17, 1902-ல் குமாரசாமிப் பிள்ளையை சங்க உறுப்பினராக்கினார். சங்கத்தின் பத்திரிகையாகிய செந்தமிழுக்கு பல கட்டுரைகளை எழுதினார். 1923-ல் புலவரின் கடைசி நூலாகிய இராமோதந்தம் நூலை இச்சங்கம் பதிப்பித்தது. மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டித தேர்வுகளுக்கு தமிழ்மொழி, தமிழ் இலக்கணம் ஆகிய பாடங்களைத் தேர்வு செய்யும் குழுவில் இடம் பெற்று பணியாற்றினார்.

அ.குமாரசாமி புலவர்

Wednesday, September 28, 2022

kunRakkudi

 குன்றக்குடி அடிகளாரின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் சிதம்பரம் அண்ணாமலைப் பல்ககலையில் படிப்பதற்காக அவர் குடும்பம் சிதம்பரத்திற்கு இடம்பெயர்ந்தது.சிதம்பரம் அருகே திருவேட்களம் என்னும் ஊரில் வாடகைவீட்டில் வசித்தனர். சீனிவாசம் பிள்ளையும் குடும்பத்தினரும் மாடுகளை வளர்த்து பால் வணிகம் செய்தனர். பல்கலை கழகப் பேராசிரியர்களுக்கு பால் கொண்டுசென்று அளித்தபோது அவர்களிடம் அணுக்கமான குன்றக்குடி அடிகளார் ந. மு. வேங்கடசாமி நாட்டார் ,ரா.பி. சேதுப்பிள்ளை , சுவாமி விபுலானந்தர் ஆகியோரிடம் அணுக்கமாகி தமிழார்வத்தை அடைந்தார்.

kunRakkudi 

வெகு ஜன இதழ்களில் கோவி. மணிசேகரனின் படைப்புகள் தொடர்ந்து வெளியாகின. குமுதம், விகடன், கல்கிகலைமகள், குங்குமம், இதயம் பேசுகிறது என தமிழின் முன்னணி இதழ்கள் அனைத்திலும் எழுதினார். ’ஒரு தீபம் ஐந்து திரிகள்’ என்பது இவரது நூறாவது நாவல். ராஜராஜ சோழனின் வரலாற்றை கலைமகள் இதழில் ’ராஜநாகம்’ என்ற பெயரில் எழுதினார். கோவி. மணிசேகரன் 95 சரித்திர நாவல்கள், 47 சமூக நாவல்கள், 5 நாடக நூல்கள், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 10 கவிதை நூல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார். இவர் எழுதிய 'குற்றாலக் குறிஞ்சி’ என்ற நூல், 1992ல் சாகித்ய அகாதமி பரிசு பெற்றது.

koovi 

-1970 முதல் வெளிவந்த கசடதபற சிற்றிதழின் குழுவில் ஞானக்கூத்தனும் இருந்தார். அதன் முதல் இதழில் தமிழை எங்கே நிறுத்தலாம் என்னும் ஞானக்கூத்தனின் கவிதை வெளிவந்தது. நா.கிருஷ்ணமூர்த்தி ஆசிரியராக இருந்தார். ஞானக்கூத்தன், க்ரியா ராமகிருஷ்ணன், சா.கந்தசாமி ஆகியோர் அதில் பணியாற்றினர்

editedit source

1978 முதல் ஆத்மாநாம் ஆசிரியராக இருந்து வெளிவந்த  என்ற கவிதைக்கான இதழில் ஞானக்கூத்தன் முதன்மைப்பங்காற்றினார். அதில் கவிதைகளுடன் கவிதை பற்றிய குறிப்புகளையும் மொழியாக்கங்களையும் எழுதினார். ஆத்மாநாம் தற்கொலைசெய்துகொண்டபின் மேலும் ஓர் இதழ் ஞானக்கூத்தன் பொறுப்பில் வெளிவந்தது

njaanakkuuththan